செய்திகள்

ஆந்திராவில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி

Published On 2018-07-12 20:09 IST   |   Update On 2018-07-12 20:09:00 IST
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இயங்கி வரும் இரும்பு ஆலை ஒன்றில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஐதராபாத்:

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு ஆலையில் விஷ வாயு தாக்கியதாக தகவல் வெளியானது. இதையடுத்து மீட்புக்குழு அப்பகுதிக்கு விரைந்து விஷவாயுவால் பாதிக்கப்பட்டிருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இரும்பு ஆலையில் விஷவாயு தாக்கியதில் இதுவரை 6 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும், 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News