செய்திகள்

எரவாடா சிறை வாசலில் ஜெயிலர் மீது துப்பாக்கி சூடு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2018-07-06 10:06 GMT   |   Update On 2018-07-06 10:06 GMT
மகாராஷ்டிர மாநிலம் எரவாடா சிறைச்சாலை வாசலில் ஜெயிலர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புனே:

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள எரவாடா சிறைச்சாலையின் ஜெயிலரான மோகன் பாட்டில் நேற்று இரவுப் பணி முடிந்து இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். காலை 8 மணியளவில் அவர் சிறையின் பிரதான வாயிலுக்கு வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

ஆனால், குறி தவறியதால் ஜெயிலர் காயம் எதுவும் இன்றி உயிர்தப்பினார். தாக்குதல் நடத்தியவர்கள் முகத்தை கைக்குட்டையால் கட்டி மறைத்திருந்ததால் அடையாளம் தெரியவில்லை. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் எரவாடா மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் இரண்டு பேர் மருத்துவமனை ஊழியர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்று விட்டனர். அவர்கள் இருவரும் மனநல சிகிச்சைக்காக சமீபத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறிப்படத்தக்கது. #YerawadaJaierAttacked
Tags:    

Similar News