செய்திகள்

தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவுடன் முன்னாள் பிரதமர் தேவே கவுடா சந்திப்பு

Published On 2018-07-01 21:52 GMT   |   Update On 2018-07-01 21:52 GMT
ஐதராபாத்தில் பயணம் செய்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா அங்கு தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேச்ச்சுவார்த்தை நடத்தினார். #CMChandrasekharRao #DeveGowda
ஐதராபாத்:

தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை கடந்த மாதம் சந்தித்த சந்திரசேகர் ராவ் இது தொடர்பாக தீவிரமாக விவாதித்தார். 

இதைத்தொடர்ந்து, தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கும் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார். கடந்த மாதம் சென்னை வந்த சந்திரசேகர் ராவ், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், ஐதராபாத்தில் பயணம் செய்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா அங்கு தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேச்ச்சுவார்த்தை நடத்தினார்.

இதுதொடர்பாக சந்திசேகர் ராவ் மகனும், தகவல் தொழில்நுட்ப துறை மந்திரியான கே டி ராமா ராவ் டுவிட்டரில் கூறுகையில், முன்னாள் பிரதமர் தேவே கவுடா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேசினார். அப்போது தானும் உடனிருந்ததாக பதிவிட்டுள்ளார். #CMChandrasekharRao #DeveGowda
Tags:    

Similar News