செய்திகள்

பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்ட டெல்லி பிஷப்புடன் முக்தார் அப்பாஸ் நக்வி சந்திப்பு

Published On 2018-06-08 20:11 IST   |   Update On 2018-06-08 20:11:00 IST
மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனையை விளக்கி, பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இன்று டெல்லி பிஷப்பை சந்தித்தார். #Naqvi #DelhiBishop
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை அக்கட்சி அறிமுகம் செய்தது. 

இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

அவ்வகையில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இன்று டெல்லி பிஷப் வாரிஸ் கே.மஸிஹ்-ஐ அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது டெல்லியில் உள்ள பல்வேறு தேவாலயங்கள், கிறிஸ்தவ கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளும், பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனையை விளக்கும் புத்தகத்தை அவருக்கு அளித்ததுடன், சிறுபான்மையின மக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாகவும் நக்வி எடுத்துரைத்தார். #Naqvi #DelhiBishop
Tags:    

Similar News