செய்திகள்

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

Published On 2018-05-30 10:52 IST   |   Update On 2018-05-30 10:52:00 IST
நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். #pmmodi #cmpalanisamy #Scholarship
சென்னை:

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகை வழங்கும் விதிகள் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதனால் மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்சனையில் பிரதமர் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அதிக அளவு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பயில்வதால் உதவித்தொகை வழங்குவதை நிறுத்தக்கூடாது. கல்வி உதவித்தொகை வழங்கும் விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்.

நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்லூரி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது. மாணவர்களுக்கான உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

என முதல்வர் குறிப்பிட்டிருந்தார். மேலும், பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதியுள்ளார். #pmmodi #cmpalanisamy #Scholarship

Tags:    

Similar News