செய்திகள்

இந்திய நடனக்கலைஞர் மிருணாளினி சாராபாய் 100-வது பிறந்த நாளை டூடுலாக கொண்டாடும் கூகுள்

Published On 2018-05-11 06:24 GMT   |   Update On 2018-05-11 06:24 GMT
இந்திய நடனக்கலைஞர் மிருணாளினி சாராபாயின் 100-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் டூடுலாக கொண்டாடி வருகிறது. #GoogleDoodle #MrinaliniSarabhai
புதுடெல்லி:

இந்தியாவின் பிரபல நடனக் கலைஞரும், பயிற்றுனரும் ஆன மிருணாளினி சாராபாய் 1918 மே 11 அன்று கேரளாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அம்மு சுவாமிநாதன் என்பவருக்குப் பிறந்தார். அகமதாபாத் நகரில் இவர் கலைக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். பரத நாட்டியம், கதகளி ஆகிய நாட்டியக் கலைகளில் இவர் 18,000 மேற்பட்டவருக்கும் அதிகமானோரைப் பயிற்றுவித்தார். பத்மஸ்ரீ, பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

இளம் வயதில் இவர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார். அங்கு டால்குரோசு பள்ளியில் மேற்கத்தைய நடனம் பயின்றார். இந்தியாவில் இரவீந்திரநாத் தாகூரின் வழிகாட்டலில் சாந்தி நிகேதனில் கல்வி பயின்ற மிருணாளினி சிறிது காலம் ஐக்கிய அமெரிக்காவில் அமெரிக்கன் நாடகக் கல்விக் கழகத்தில் இணைந்து பயிற்சி பெற்று இந்தியா திரும்பினார். இந்தியாவில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியமும், தகழி குஞ்சு குருப்பு என்பவரிடம் கதகளி நடனமும் பயின்றார்.



இவர் உடல்நலக் குறைவின் காரணமாக 21 ஜனவரி 2016 அன்று அகமதாபாத்தில் காலமானார். இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாயின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பத்மஸ்ரீ மிருணாளினி சாராபாயின் 100-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் டூடுலாக கொண்டாடி வருகிறது. #GoogleDoodle #MrinaliniSarabhai
Tags:    

Similar News