செய்திகள்

டெல்லியில் தீவிபத்தில் சிக்கி இரு குழந்தைகள் பலி

Published On 2018-05-04 22:33 GMT   |   Update On 2018-05-04 22:33 GMT
டெல்லியின் ஆதர்ஷ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுடெல்லி:

டெல்லியின் ஆதர்ஷ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இரவு சுமார் 10:30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீவிபத்தில் அந்த வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News