செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குதல்

Published On 2018-02-24 15:15 IST   |   Update On 2018-02-24 15:15:00 IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா பகுதியில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். #JammuKashmir #Pakistantroops #ceasefireviolation

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா பகுதியில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்திற்கு உட்பட்ட உரி பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகில் அமைந்துள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது இன்று மதியம் சுமார் 11:50 மணி முதல் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள கிரமங்களில் வசித்துவந்த 500க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் படைகளின் தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுவருவதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #Pakistantroops #ceasefireviolation #Urisector #tamilnews

Similar News