செய்திகள்

பாக். எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ராஜஸ்தான் அரசுடன் ராணுவம் ஒப்பந்தம்

Published On 2017-11-30 05:50 GMT   |   Update On 2017-11-30 05:50 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசு மற்றும் இந்திய ராணுவம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது
ஜெய்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள விமான தளத்தை ராணுவம் பயன்படுத்திக்கொள்ளவும், தேவைக்கேற்ப கட்டுமானங்களை மேற்கொள்ளவும் மாநில அரசு மற்றும் இந்திய ராணுவத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதாகியுள்ளது.

லால்கார்க் பகுதியில் உள்ள விமான தளத்தை பத்து ஆண்டுகள் ராணுவம் பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், விமான தளத்தை பராமரிக்க ஆகும் செலவை மாநில அரசு அளிக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப தற்காலிகமாக ராணுவம் கட்டுமானப்பணிகளை செய்து கொள்ளலாம் என மாநில விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News