செய்திகள்

டெல்லி: உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகள் கைது

Published On 2017-09-29 20:03 GMT   |   Update On 2017-09-29 20:03 GMT
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி:

டெல்லி ஜந்தர்மந்தரில் இரண்டாவது கட்டமாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் 76 நாட்களை தாண்டி நீடிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாள்தோறும் விதவிதமான போராட்டங்களை தமிழக விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 76-வது நாளான நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News