செய்திகள்
அம்தேலி கிராமத்திற்கு வந்த எம்.எல்.ஏ.வை வரவேற்கும் கிராம மக்கள்

70 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் மின்சாரம், பேருந்து வசதியை பெற்ற கிராமத்தினர்

Published On 2017-09-29 12:40 GMT   |   Update On 2017-09-29 12:40 GMT
மராட்டியம் - தெலுங்கானா மாநில எல்லையில் 200 பேர் வசிக்கும் குக்கிராமத்தினர் நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கழித்து மின்சாரம் மற்றும் பேருந்து வசதியை பெற்றுள்ளனர்.
மும்பை:

மராட்டிய மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது அம்தேலி கிராமம். தெலுங்கானா மாநில எல்லையில் இருப்பதால் இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலோனோர் தெலுங்கு மொழி பேசுகின்றனர்.

சுமார் 200 பேர் வசிக்கும் இந்த கிராமம் மலைப்பாங்கான பகுதியில் இருப்பதால், தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல்வாதிகள் வந்து ஓட்டு கேட்பதோடு சரி.

பின்னர் தோற்றாலும், ஜெயித்தாலும் இந்த கிராமத்தின் பக்கம் அவர்கள் வருவதே இல்லை. நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும் மின்சாரம், போக்குவரத்து என அடிப்படை வசதிகள் கூட கிராம மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த மந்திரி ராஜே அம்ப்ரிஷ்ராவ் மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து 45 லட்சம் ரூபாயை அம்தேலி கிராமத்திற்காக ஒதுக்கியிருந்தார்.

இதனையடுத்து, அம்மாநில மின்சார வாரியம் அக்கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியுள்ளது. மேலும், அருகிலுள்ள நகரத்தில் இருந்து கிராமத்திற்கு போக்குவரத்து வசதியும் செய்தது. இந்த திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக பா.ஜ.க எம்.எல்.ஏ பேருந்து மூலம் அம்தேலி கிராமத்திற்கு சென்று மின்சார விளக்கை ஆன் செய்து கிராமவாசிகளுக்கு
வெளிச்சத்தை காட்டியுள்ளார்.
Tags:    

Similar News