செய்திகள்

காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது

Published On 2017-09-23 04:59 GMT   |   Update On 2017-09-23 04:59 GMT
ஜம்மு-காஷ்மீரில் பண்டி போராவின் சிம்கோல் பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் பண்டி போராவின் சிம்கோல் பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று அதிகாலை 5.44 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. பண்டி போராவின் சிம்கோல் பகுதியை மையமாக வைத்து நில நடுக்கம் உருவானது.

 லேசான நிலநடுக்கம் என்பதால் சேதம் இல்லை. கட்டிடங்கள், வீடுகள் லேசாக குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர்.
Tags:    

Similar News