செய்திகள்

சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு: சென்னை உள்ளிட்ட இடங்களில் சோதனை

Published On 2017-02-20 18:39 GMT   |   Update On 2017-02-20 18:39 GMT
சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் அமர் பிரதாப் சிங்கின் வீட்டிலும், மொயின் குரேஷி சம்பந்தப்பட்ட வீடு, அலுவலகங்களிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
புதுடெல்லி:

சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் பணி முடித்து தருவதற்காக பணம் பெற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவின் பிடியில் சிக்கி உள்ளார்.

மொயின் குரேஷிக்கு சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் அமர் பிரதாப் சிங் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அமலாக்கப்பிரிவின் புகாரை ஏற்று, அமர் பிரதாப் சிங் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, அமர் பிரதாப் சிங்கின் வீட்டிலும், மொயின் குரேஷி சம்பந்தப்பட்ட வீடு, அலுவலகங்களிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. சென்னை, டெல்லி, காசியாபாத், ஐதராபாத் ஆகிய இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டது. சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்துவது, இதுவே முதல்முறை ஆகும். 

Similar News