செய்திகள்
ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க பன்றிக்குட்டியுடன் சென்ற நடிகர்
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க தெலுங்கு நடிகர் ரவிபாபு பன்றிக்குட்டியுடன் சென்ற சம்பவம் ஐதராபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்:
ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம், வங்கிகள் முன்பு கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் ரவிபாபு தனது வளர்ப்பு பன்றிக்குட்டியுடன் ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்ற சம்பவம் ஐதராபாத் பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், இயக்குனருமான ரவிபாபு இதுகுறித்து கூறுகையில் "நான் வளர்த்து வரும் பன்றிக்குட்டியை வீட்டில் யாரும் ஒழுங்காக பார்த்துக் கொள்வதில்லை. அதனால் எங்கு சென்றாலும் அதனை உடன் அழைத்து செல்கிறேன். எனக்கு ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க வேண்டி இருந்தது.
அதனால் என்னுடன் பன்றிக்குட்டியையும் உடன் அழைத்து சென்றேன். தற்போது நான் எடுத்து வரும் படத்தில் (அதுகோ) முக்கிய வேடத்தில் பன்றி நடித்து வருகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக என்னுடைய படத்தில் தான் பன்றியை நடிக்க வைத்து வருகிறேன்" என்றார்.
ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம், வங்கிகள் முன்பு கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் ரவிபாபு தனது வளர்ப்பு பன்றிக்குட்டியுடன் ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்ற சம்பவம் ஐதராபாத் பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், இயக்குனருமான ரவிபாபு இதுகுறித்து கூறுகையில் "நான் வளர்த்து வரும் பன்றிக்குட்டியை வீட்டில் யாரும் ஒழுங்காக பார்த்துக் கொள்வதில்லை. அதனால் எங்கு சென்றாலும் அதனை உடன் அழைத்து செல்கிறேன். எனக்கு ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க வேண்டி இருந்தது.
அதனால் என்னுடன் பன்றிக்குட்டியையும் உடன் அழைத்து சென்றேன். தற்போது நான் எடுத்து வரும் படத்தில் (அதுகோ) முக்கிய வேடத்தில் பன்றி நடித்து வருகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக என்னுடைய படத்தில் தான் பன்றியை நடிக்க வைத்து வருகிறேன்" என்றார்.