செய்திகள்

கொல்கத்தாவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜே.என்.யு மாணவர் உமர் காலித்துக்கு எதிர்ப்பு

Published On 2016-05-22 04:40 IST   |   Update On 2016-05-22 04:40:00 IST
கொல்கத்தாவில் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ஜே.என்.யு மாணவர் உமர் காலித்துக்கு ஹிந்து அமைப்பை சிலர் எதிர்ப்புதெரிவித்தனர்.
கொல்கத்தா:

கொல்கத்தாவில் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ஜே.என்.யு மாணவர் உமர் காலித்துக்கு ஹிந்து அமைப்பை சிலர் எதிர்ப்புதெரிவித்தனர்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் உமர் காலித் நேற்று கொல்கத்தா வந்திருந்தார். அப்போது உமர் காலித்திற்கு எதிராக ஹிந்து சமிதி அமைப்பை சேர்ந்த சிலர் ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், பா.ஜ.க., கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் உமர் காலித்தை பாரத் மாதா கீ ஜே என்று முழக்கம்மிட வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பதிலளித்து உமர்காலித் பேசியதாவது:-

ஆர்ப்பாட்டக்காரர்களை நான் வரவேற்கின்றேன். போராட்டத்தில் ஈடுபடுவது ஒவ்வொருவரது ஜனநாயக உரிமை. நாங்கள் என்ன தவறு செய்கிறோம் என்பதை கண்டறிய போராட்டத்தில் ஈடுபடுவது அவர்களது ஜனநாயக உரிமை. அதேபோல், எங்களது என்ணங்களை வெளிப்படுத்துவதும் எங்களது உரிமை.

இவ்வாறு கூறினார்.

முன்னதாக ஜே.என்.யு வளாகத்தில் அப்சல் குருவிற்கு ஆதரவாக நிகழ்ச்சி நடத்தியதாக கூறி உமர் காலித் உள்ளிட்ட மாணவர்ள் தேசப் துரோத வழக்கில் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Similar News