செய்திகள்
காஷ்மீர்: பாதுகாப்பு படை என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநில தென்பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பெரும்நாசத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இங்குள்ள பன்ஸ்காம் கிராமத்தை தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் கொண்ட கூட்டுக்குழுவினர் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். அவர்கள்மீது துப்பாகிகளால் சுட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர் தாக்குதல் நடத்தினர்.
விடிய, விடிய நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இன்று அதிகாலை மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
கொல்லப்பட்ட அஷ்பாக் அஹமத் தார், இஷ்பாக் அஹமத் பாபா, ஹசீப் அஹமத் ஆகிய இவர்கள் மூவரும் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில தென்பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பெரும்நாசத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இங்குள்ள பன்ஸ்காம் கிராமத்தை தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் கொண்ட கூட்டுக்குழுவினர் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். அவர்கள்மீது துப்பாகிகளால் சுட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர் தாக்குதல் நடத்தினர்.
விடிய, விடிய நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இன்று அதிகாலை மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
கொல்லப்பட்ட அஷ்பாக் அஹமத் தார், இஷ்பாக் அஹமத் பாபா, ஹசீப் அஹமத் ஆகிய இவர்கள் மூவரும் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.