கதம்பம்

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-03-19 08:53 GMT   |   Update On 2023-03-19 08:53 GMT
  • திருமணமான ஒரு ஆண்டில் பரிதாபம்
  • உதவி கலெக்டர் விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம் கிராமம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவரது மனைவி ரோஜா (வயது 23). ஒரு வருடத்திற்கு முன் இவர்களது திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரோஜா நேற்று முன் தினம் இரவு சுமார் 7.30 மணியளவில் வீட்டின் மாடியில் உள்ள அறையில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

திருமணமாகி ஒரு வருடத்திற்குள் ரோஜா இறந்துள்ளதால் அது குறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்