- ஹோவி பிரபு தீவில் மக்கள் தொகை 400 தான்.
- ஹோவி தீவு ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே உள்ளது.
ரொம்ப கஸ்டமான ஒரு சுற்றுலா போகணுமா? ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ஒரு விமானத்தை பிடிங்க. அங்கிருந்து நியூஸிலாந்து போகும் வழியில் 700 கிமி தொலைவில் லார்ட் ஹோவி தீவு உள்ளது.
"இதெல்லாம் ஒரு அதிசயமா? சிட்னிக்கு போறது கிட்னியை விற்கும் அளவு கஸ்டமா?"னு டென்சன் ஆகக்கூடாது.
ஹோவி பிரபு தீவில் மக்கள் தொகை 400 தான். தீவிலும் அதே எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் தான் இருக்கமுடியும். அதனால் அங்கிருந்து ஒரு சுற்றுலா பயணி கிளம்பினால் தான் உங்களுக்கு அங்கே போக டிக்கட் கிடைக்கும்.
எதுக்கு இப்படி எண்ணிக்கையை மட்டுப்படுத்துகிறார்கள்?
ஹோவி தீவு ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே உள்ளது. மனித நடமாட்டமே இல்லை என்பதால் இறகுகள் இல்லாத நிறைய பறவை இனங்கள் ஜாலியாக வசித்து வந்தன. அவற்றை உண்ண பாம்புகள் இல்லை, முட்டைகளை திருட எலிகள் இல்லை, பூனைகள் இல்லை, கழுகுகள் இல்லை. சொர்க்கம் மாதிரியான வாழ்க்கை.
தீவின் அகலம் 2 கிமீ, நீளம் 14 கிமீ. அழகான பீச்சுகள், உலகில் எங்கேயும் காணமுடியாத வித்தியாசமான மரம், செடிவகைகள்...அங்கே கிடைக்கும் கென்டியா எனும் ஒரு வகை பனை ஐரோப்பாவெங்கும் வெகு பிரபலம். உலகிலேயே இங்கே மட்டும் தான் அவை கிடைக்கும். தீவின் மிக முக்கிய ஏற்றுமதிப்பொருள்.
ஆனால் மனிதன் காலடி எடுத்து வைத்தான். தொல்லைகள் துவங்கின. பல பறவை இனங்கள் அழிந்தன. சுற்றுலா பயணிகள் குவிந்தார்கள். தீவெங்கும் எலிகள் பெருகின.
2015ம் ஆண்டு தீவுவாசிகள் விழித்துக்கொண்டார்கள். இயற்கையை காப்பாற்றவேண்டுமெனில் முதலில் சுற்றுப்பயணத்தை கட்டுபடுத்தனும் என முடிவு செய்து ஒரு சமயத்துக்கு 400 பயணிகள் தான் என மட்டுப்படுத்தினார்கள். டீசல் ஜெனெரேட்டர் மூலம் தீவுக்கு கிடைத்த மின்சாரம் சோலார் பேனலுக்கு மாறியது. தீவின் இயற்கை கழிவுகள் முழுக்க காம்போஸ்ட் செய்யபட்டு உரமாக்கபட்டன.
சுற்றுலா பயணிகளுக்கு கார்கள் கிடையாது. சைக்கிள்தான். தீவின் சுற்றளவு மிக குறைவு என்பதால் அவர்களும் சரி என சொல்லிவிட்டார்கள். ஓட்டல் அறைவாடகைகள் மிக அதிகரிக்கபட்டன. உணவகங்களில் விலையும் கூட்டபட்டது. சீசனுக்கு போனால் ஒரு நாள் வாடகை ரூ 32,000 வரும். அதனால் வசதியான நபர்கள் தான் சுற்றுலா போகமுடியும்.
இவர்களின் முயற்சியின் விளைவால் யுனெஸ்கோ அமைப்பு அந்த தீவுக்கு "உலக பாரம்பரிய தீவு" எனும் அங்கீகாரத்தை வழ்ங்கியுள்ளது
- நியாண்டர் செல்வன்