கதம்பம்

வாயில் புடவை...

Published On 2022-08-21 10:10 GMT   |   Update On 2022-08-21 10:10 GMT
  • நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து, வெயில்படும்படியாக துவைத்த புடவையை அதன் மேல் காயப்போட்டிருந்தார்.
  • புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ. “இது என்ன புடவை தெரியுமா”? என்று நண்பரிடம் கேட்டார்.

ஒரு நண்பரின் வீட்டிற்கு தமிழ் அறிஞர் கி.வா.ஜகன்நாதன் சென்றிருந்தார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெயில் படுகிற வகையில் வசதியான இடம் வீட்டில் இருக்கவில்லை... வாசல் பக்கத்தில் தான் வெயில் அடித்துக் கொண்டிருந்தது.

நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து, வெயில்படும்படியாக துவைத்த புடவையை அதன் மேல் காயப்போட்டிருந்தார்.

புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ. "இது என்ன புடவை தெரியுமா"? என்று நண்பரிடம் கேட்டார்.

"ஏன் இது சாதாரண புடவைதானே!" என்றார் நண்பர்.

"இல்ல... இந்த புடவைக்கு ஒரு விஷேச சிறப்பு உண்டு. இது தான் உண்மையான வாயில் புடவை" என்றார் கி.வா.ஜ.

-பே.சண்முகம்

Tags:    

Similar News

தம்பிடி