கதம்பம்

உறவுகளே சொர்க்கம்...

Published On 2023-01-13 15:25 IST   |   Update On 2023-01-13 15:25:00 IST
  • வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம்.
  • குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்...

தாய் ....இருந்தால் துன்பம் இல்லை.

தந்தை...இருந்தால் தவிப்பு இல்லை.

தங்கை... இருந்தால் தனிமை இல்லை.

தாத்தா... இருந்தால் தயக்கம் இல்லை.

பாட்டி.... இருந்தால் பயம் இல்லை.

அக்கா....இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்.

அண்ணன்....இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு.

தம்பி... இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்.

மனைவி...இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்.

மகள்.... இருந்தால் மழலைப் பருவம் தெரியும்.

மகன்.... இருந்தால் மாண்புமிக்க வம்சம் நிலைக்கும்.

நட்பு....இருந்தால் உயிர் காக்கும் அனைத்தும் கிடைக்கும்.

மண்ணில் இறக்கப் போகிறோமே தவிர..

மீண்டும் மண்ணில் ஒன்றாகப் பிறக்கப் போவது இல்லை....

வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம்.

குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்...

அதை சொர்க்கமாக்குவதும்,

நரகமாக்குவதும்

நம் கையில் தான் உள்ளது..

Tags:    

Similar News