கதம்பம்

கர்ம சுமைகளை கழிக்கும் வழிபாடு!

Published On 2024-02-06 11:45 GMT   |   Update On 2024-02-06 11:45 GMT
  • நமது கர்மாவில் இருந்தால் சுப நிகழ்வுகளை, மகிழ்ச்சியை அனுபவிக்க இயலாது.
  • பித்ருக்களின் கர்ம சுமைகள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

விதி காரகன் என்று அழைக்கப்படக்கூடிய. சூரியன், இயக்க ஸ்தானமான பத்தாம் இடத்தில் அமர்கின்ற மாதத்தைதான் தை மாதம் என அழைக்கிறோம்.

தை பிறந்தால் வழி பிறக்கும், என்ற நம்பிக்கை நம் மக்கள் மனதில் ஊறி இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம், விதியும் இயக்கமும் இணையும் போது அங்கே ஒரு நல்ல நிகழ்வு நடந்தே தீர வேண்டும்.

எனவேதான் தை மாதத்தில் ஏராளமான, புண்ணிய நாட்களை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

வருடத்தின் 12 அமாவாசைகளில் மிக முக்கியமான அமாவாசைகள், ஆடி அமாவாசை,

மஹாளய அமாவாசை, தை அமாவாசை.

இந்த மூன்று அமாவாசை நாட்களும் மிகுந்த சூட்சுமம் நிறைந்த நாட்கள்.

பித்ருக்களின் உதய பொழுது தை அமாவாசை!

பித்ருக்களின் அந்திப்பொழுது ஆடி அமாவாசை !

பித்ருக்களின் கர்மாவை கரைக்கும் மிக முக்கிய நாள் மகாளய அமாவாசை !

நாம் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், அதற்கான காரணத்தை அறிவதற்கும், அதற்கான தீர்வை பெறுவதற்கும், ஜாதகம் பார்க்க வேண்டியதில்லை, கோவில் கோவிலாக சென்று பரிகாரம் செய்ய வேண்டியது இல்லை. மிக எளிமையான வேலை பித்ருக்களின் சுமையை அகற்றுவது !

எவ்வளவு பெரிய சுப ஜாதகமாக இருந்தாலும், நமது பித்ருக்களின் சுமைகள், நமது உடலில், நமது கர்மாவில் இருந்தால் சுப நிகழ்வுகளை, மகிழ்ச்சியை அனுபவிக்க இயலாது.

தற்காலத்தில் நாம் தீர்க்க இயலாத பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இவை அனைத்திற்கும் மூல காரணம் பித்ருக்களின் கர்ம சுமைகள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இதைத்தான் அறிவியலும் மருத்துவமும் ஜெனிடிக் குறைபாடு என அழைக்கிறது. ஜெனட்டிக் குறைபாடு அகற்றும் வழிமுறை, மருத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் இன்னும் கண்டறியவில்லை.

ஆனால், ஆன்மீகத்தில் நமது முன்னோர்கள் கண்டறிந்து நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அந்த வழிமுறைதான் பித்ரு வழிபாடு !

தை மாதத்தில் நிகழும் மிக முக்கியமான நிகழ்வான தை அமாவாசையில் பித்ரு வழிபாட்டை செய்து, நமது முன்னோர்கள் சுமை அகற்றி, நாமும் நமது வாரிசுகளும் நன்மை அடையும் வழிமுறைகளை செய்வோம்.

-ஜோதிடர் சிவ. இராம. கணேசன்

Tags:    

Similar News

தம்பிடி