- கடன்தொல்லை போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும்.
- வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள்.
இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகைகளையும் வளர்த்து வருகின்றனர்.
அகத்தியர் பெருமான் கூறி உள்ள மரம், செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல், செய்தொழில் நஷ்டம், வருவாய் இழப்பு, கடன்தொல்லை, மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதிப்படைவோர் தனது கிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக்கொண்டிருப்பார்கள்.
எனவே கீழ் கண்ட செடி, மரங்களை உங்கள் இல்லங்களில் நடவேண்டாம். இருந்தாலும் வீட்டின் முன்புறம் நட வேண்டாம்...
1) முருங்கை
2) கல்யாண முருங்கை
3) பருத்தி
4) அகத்தி
5) பனை
6) நாவல்
7) எருக்கு
8) வெள்ளெருக்கு
9) புளி
10) கருவேலம்
11) கள்ளி
12) கருவூமத்தை
13) இலவம்
14) வில்வம்
15) ருத்ராக்ஷம்
16) அத்தி
17) உதிரவேங்கை
வாஸ்து குற்றமில்லா வீடாக இருந்தாலும் இந்த செடிகள், மரங்கள்வீட்டின் முன்புறம் இருந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது.
-சித்தர் குரல் சிவசங்கர்