கதம்பம்

குணமும் நலமும்...

Published On 2023-01-21 15:25 IST   |   Update On 2023-01-21 15:25:00 IST
  • பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்.
  • எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்.

அசுத்தமான குடிநீர், உணவு, சுற்றுச்சூழல் மட்டுமல்ல கெட்ட குணங்களால் கூட நமக்கு நோய்கள் வரும்.

ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...

பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்.

கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்.

துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்.

பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்.

எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்.

அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

மருந்தைக் குறிக்கும் மெடிசன் என்ற வார்த்தையும் தியானத்தைக் குறிக்கும் மெடிடேஷன் என்கிற வார்த்தையும் ஒரே மூலத்தில் இருந்து உருவானவை.

மருந்து உடல் நோயை போக்கும். தியானம் உளநோயை போக்குவதுடன் உடல் நோயையும் கட்டுப்படுத்தும்.

ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும்.

எனவே கவலைகளை விட்டொழியுங்கள்...

மகிழ்ச்சியாய் இருங்கள்...

அமைதியாய் இருங்கள்..

ஆனந்தம் என்றும் நிலைத்திருக்கும்.

-கோ. வசந்தராஜ்

Tags:    

Similar News