கதம்பம்
null

புது பிறவி!

Published On 2024-01-22 16:16 IST   |   Update On 2024-01-22 17:03:00 IST
  • முட்டையிலிருந்து உருவானவை பறவை, ஊர்வன இனங்கள் போன்றனவாகும்,
  • தாயின் கர்ப்பப்பையில் இருந்து உருவாகுது.

நால்வகை யோனி என்பது,

1) விதை வித்திலிருந்து உருவாவது..

2) முட்டையில் இருந்து உருவாவது..

3) வியர்வை மற்றும் கிருமிகளில் இருந்து உருவாவது..

4) தாயின் கர்ப்பப்பையில் இருந்து உருவாவது.

விதை வித்திலிருந்து உருவானவை தாவர ஜந்துக்களாகவும்,

முட்டையிலிருந்து உருவானவை பறவை, ஊர்வன இனங்கள் மற்றும் ஆமை மீன் போன்றனவாகவும்,

வியர்வை கிருமியில் இருந்து உருவாவது, பாக்டீரியா, வைரஸ், பங்கஸ் போன்றவாகவும்,

தாயின் கருப்பையில் உருவாவது மனிதர்கள் மற்றும் மிருகங்கள் போன்றனவாகும்.

இந்த நால்வகை யோனிகளை கடந்து ஐந்தாவது யோனியில் எவன் பிறப்பானோ அவனே தான் சித்த நிலையை அடைகிறான்.

அந்த ஐந்தாவது யோனியை பற்றி காகபுஜண்டர் பெருமான் கூறிய ரகசியம் இது.... எவன் ஒருவன் "தன் யோக பலத்தினால் அண்ணாமலைக்கு நேராக உண்ணா முலையை பெற்றிருக்கிறானோ" அதாவது அண்ணாக்கு நேர் எதிர் உண்ணாக்கில் அமுது சுரக்கும் உண்ணாமுலையை, கொண்டிருக்கிறானோ, அவனது மேல் திரை கிழிந்த உடன், அவன் உட்சுவாசம் கொண்டவனாக மாறுகிறான். அவனே ஐந்தாவது யோனி பிறப்பு கொண்டவனாகிறான்.

குண்டலினி கிளம்பி மேல் எழும்பி ஆதார சக்கரங்களை கடந்து சகஸ்ராரம் சென்றடையும் போது,அவனின் ஆன்மதிரை விலகுகிறது. உட் சுவாசம் தொடங்குகிறது..புது பிறவி கிடைக்கிறது.. அதாவது புது யோனியில் பிறந்தவன் ஆகிறான்.

- சிவசங்கர்

Tags:    

Similar News