கதம்பம்

அதிசய கண்மணி!

Published On 2023-12-11 17:45 IST   |   Update On 2023-12-11 17:45:00 IST
  • நம் உடலும் பஞ்ச பூதத்தால் ஆனது.
  • நம் உடலில் கண்களில்தான் பஞ்சபூதமும் உள்ளது

எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம், நம் சிரசாகிய தலையில் உள்ள முக்கியமான உறுப்பு கண்கள் ! தலைக்கு தலையாயது கண்ணே.!

ஒரு தாயின் கருவில் முதன்முதலாக உருவாவது கண்மணி.!

நாம் பிறந்தது முதல் 100 வயதுவரை நம் உடலில் வளர்ச்சியடையாத முதிர்ச்சியடையாத ஒரே உறுப்பு கண்மணி !

உலகமக்கள் அனைவருக்கும் ஒரே அளவில் உள்ளது கண்மணி.!

நம் உடலில் இரத்தம் இல்லாதது; எலும்பு இல்லாதது, நரம்பு இல்லாதது; உடலில் ஒட்டாமல் இருப்பது கண்மணி.!

உலகமே பஞ்ச பூதங்களால் ஆனது. நம் உடலும் பஞ்ச பூதத்தால் ஆனது. நம் உடலில் கண்களில்தான் பஞ்சபூதமும் உள்ளது !

கண்தானம் செய்கிறார்கள் அல்லவா ? யார் கண்ணையும் யாருக்கும் பொருத்தலாமல்லவா? இதிலிருந்து என்ன தெரிகிறது ?

கண்களில் சிறியவர் கண், பெரியவர் கண் என்ற பேதமில்லை, உலகிலுள்ள எல்லோர் கண்ணும் ஒரேமாதிரி தான் !? எனவேதான் யார் கண்ணை வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் தானம் செய்யலாம் !? கண்ணுக்கு எந்த வித்தியாசமுமில்லை !?

எந்தவித வித்தியாசமுமில்லாத அந்த கண்ணில் தான்; இறைவனும் எந்தவித பேதமுமின்றி உலகோர் எல்லோரிடத்தும் ஒரேமாதிரி இருக்கின்றான் !?

ஒரேமாதிரி இருக்கின்ற அந்த இறைவன்தான்- ஒளி தான் நமக்கு தாயும் தந்தையுமாவான் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ்

Tags:    

Similar News