கதம்பம்

பிரமிடை கட்டிய ஏலியன்கள்

Published On 2024-02-03 15:39 IST   |   Update On 2024-02-03 15:39:00 IST
  • எகிப்தை பிடித்த ஆங்கிலேயரால் பிரமிடுகளை எப்படி கட்டினார்கள் என புரிந்துகொள்ளவே முடியவில்லை.
  • முதன் முதலாக விஞ்ஞான புனைகதை எழுத்தாளர்கள் ஏலியன்கள் தான் பிரமிடுகளை கட்டினார்கள் என எழுதினார்கள்.

எகிப்தின் கீசா பிரமிடின் உயரம் 455 அடி. தஞ்சை பெரிய கோவிலை விட இரு மடங்கு உயரம். பெரியகோவிலுக்கு 3560 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டது. இன்று அதை கட்டி 4584 ஆண்டுகள் ஆகின்றன.

கீஸா பிரமிடின் உச்சியில் 80 டன் எடையுள்ள கல்லை வைத்தார்கள். கிபி 1311ம் ஆண்டுவரை அதுதான் உலகின் மிக உயரமான கட்டிடம்.

ஒப்பீட்டளவில் கிஸா பிரமிட் ஹரப்பா, மொகஞ்சதாரோ காலகட்டத்தை ஒட்டியது. கிளியோபாட்ரா ஆட்சி நடக்கையிலேயே கீஸா பிரமிட் 2500 ஆண்டுகள் பழமையானதாக இருந்தது.

அன்றே பிரமிடுகள் உலகின் ஏழு அதிசயங்களுல் ஒன்றாக அறிவிக்கப்பட்டு அவற்றை பார்க்க ஏராளமான கிரேக்க, ரோமானிய சுற்றுலா பயணிகள் வந்தார்கள்.

பின்னாளில் 19ம் நூற்றாண்டில் எகிப்தை பிடித்த ஆங்கிலேயரால் பிரமிடுகளை எப்படி கட்டினார்கள் என புரிந்துகொள்ளவே முடியவில்லை.

முதன் முதலாக விஞ்ஞான புனைகதை எழுத்தாளர்கள் ஏலியன்கள் தான் பிரமிடுகளை கட்டினார்கள் என எழுதினார்கள்.

சயன்ஸ் பிக்ஷன் நாவல்களில் பரபரப்பாக உலா வந்த இந்த கருத்தாக்கத்தை 1962ல் எரிக் வான் டானிக்கனின் "கடவுளின் தேர்கள்" (Charriots of Gods) எனும் நூலில் நிஜமாகவே இதை கட்டியது ஏலியன்கள் தான் என எழுதிவிட்டார். சயன்ஸ் சேனல், ஹிஸ்டரி சேனல் எல்லாம் அதை இன்றும் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

- நியாண்டர் செல்வன்

Tags:    

Similar News