- முகப்பொலிவை ஏற்படுத்தி உடல் எடையை கூட்டும்.
- தோல் சுருங்கி காணப்படும் கிழட்டுத்தனம் போன்றவற்றையும் சரி செய்யக்கூடியது அமுக்கிராங்கிழங்கு.
அமுக்கரா என்று சொன்னதும் சிலர் கேலி, கிண்டல் செய்வார்கள். ஆனால், அதன் மகிமை தெரிந்தவர்கள் அப்படி கிண்டல் பேச மாட்டார்கள்.
அமுக்கரா, அமுக்கராங்கிழங்கு, அமுக்கிரான்கிழங்கு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது சித்த வைத்தியத்திலும், ஆயுர்வேத வைத்தியத்திலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதை லேகியமாகவும் செய்து விற்கிறார்கள்.
அமுக்கராங்கிழங்கில் உள்ள மருந்து சாரங்கள் ஆஸ்துமா மற்றும் மூட்டு வாத நோய்களுக்கு பயன்படக்கூடிய ஸ்டீராய்டுகளில் ஒன்றான கார்டிசோன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அமுக்கிராங்கிழங்கை எந்த வடிவத்தில் சேர்த்தாலும் நரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு இந்திரியத்தின் தரத்தையும், அளவையும் அதிகரிக்கச்செய்வதோடு முகப்பொலிவை ஏற்படுத்தி உடல் எடையை கூட்டும்.
தாம்பத்ய உறவில் நாட்டமில்லாதவர்கள் அமுக்கிராங்கிழங்கு பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். போக சக்தியை அதிகரிக்கச்செய்து ஆண்மைக்குறைபாட்டை சரி செய்யக்கூடியது. நீர்த்துப்போன இந்திரியத்தை கட்டித்தன்மை பெறச்செய்யும்.
காச நோய், மூட்டு - முடக்கு வாதம், குழி விழுந்த கன்னம் மற்றும் தோல் சுருங்கி காணப்படும் கிழட்டுத்தனம் போன்றவற்றையும் சரி செய்யக்கூடியது அமுக்கிராங்கிழங்கு.
நாட்டு மருந்து கடைகளில் உலர்ந்த கிழங்காக கிடைக்கும் இந்த அமுக்கிராங்கிழங்கை வாங்கி வந்து பொடியாக்கி 250 கிராம் அளவு எடுத்து 75 மில்லி தேன், 75 மில்லி பசுநெய் விட்டு கலந்து சூடாக்கி லேகியம் போல் செய்து வைத்துக்கொள்ளலாம். இதில் ஒரு டீஸ்பூன் காலை, மாலை சாப்பிட்டு சூடான பால் குடித்து வந்தால் ஹார்மோன் வளர்ச்சி அதிகரிக்கும். பெண்களின் மார்பகம் செழித்து வளர உதவும். ஆண் - பெண், பெரியவர் - சிறியவர் என யார் சாப்பிட்டாலும் உடல் பலவீனம் போக்கி நரம்புத்தளர்ச்சியை நீக்கி புத்துணர்ச்சி பெறச்செய்யும்.
-மரிய பெல்சின்