கதம்பம்

அந்த உணவும் தேவை!

Published On 2024-12-07 17:30 IST   |   Update On 2024-12-07 17:30:00 IST
  • பெரும் உணவு என்பது உடல் நிறைய சாப்பிடுவது.
  • சத்துக்களின் விகிதம் உணவுக்கு ஏற்ப மாறுபடும்.

நாம் நலமாக வாழ மூன்று வகை உணவுகள் அவசியம் தேவை. அவை பெரும் உணவு, நுண்ணுணவு, நுட்ப உணவு என்பவையாகும்.

பெரும் உணவு என்பது உடல் நிறைய சாப்பிடுவது. காற்றை தான் அதிகம் சாப்பிடுகிறோம். நீரிலும் காற்றுதான் அதிகம் உள்ளது. மூக்கால் மட்டுமல்ல தோல் மூலமும் சுவாசிக்கிறோம். வாயால் மட்டுமல்ல தோல் மூலமும் நீரை உறிஞ்சுகிறோம். இவற்றை எப்போதும் இயற்கையிடம் இருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறது உடல். இதனால் தான் பெரும் உணவு எனப்பட்டது.

வாய் வழியாக சாப்பிடும் சோறு, இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற திட உணவுகள் நுண்ணுணவு எனப்படும். இந்த உணவில் கரிமம், பிராணன், ஹைட்ரஜன், தாது உப்புக்கள், வைட்டமின்கள், கொழுப்பு நார்ச்சத்து போன்றவை இருக்கும். இந்த சத்துக்களின் விகிதம் உணவுக்கு ஏற்ப மாறுபடும்.

மூன்றாவது நுட்ப உணவு. எல்லா விலங்குகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த உணவு தான் காரணம். அது மேக்னட்டிக் எனப்படும் காந்த சக்தியாகும். இந்த உலகம் அளப்பெரிய காந்த சக்தியை கொண்டுள்ளது. உடலிலும் காந்த சக்தி உள்ளது. இது குறைந்தால் பூமியிலிருந்து கிரகித்து கொள்ளும் உடல். இதற்கு நிலத்துடன் தொடர்பு இருக்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு தாயின் அரவணைப்பு எவ்வளவு முக்கியமோ அது போன்று மனிதனுக்கு பூமியே தாய். அளப்பறிய ஆற்றல் மிக்க அதன் தொடர்பில் இருந்தால் நுட்ப உணவு எனப்படும் காந்த சக்தி தாராளமாக கிடைக்கும். இதற்கு மழையில் நனைந்து வெயிலில் குளித்து வெட்டவெளியில் நடக்க வேண்டும்.

ஆரோக்கிய உணவுகளை உண்டாலும் அது செரிமானம் ஆனால் தான் சத்தாக மாறி உடலில் சேரும். உண்ட உணவு செரிமானம் ஆக பூமியில் கிடைக்கும் காந்த சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அது போதிய அளவில் கிடைத்தால் தான் சுரப்பிகள் வேலை செய்யும். உணவை செரிமானம் செய்து ஆற்றலை உறிஞ்ச வைக்கும். காந்த சக்தி கிடைக்காத போது செரிமானம் மந்தமாகி உண்ட உணவே நஞ்சாச மாறிவிடும். எனவே கூடுமானவரை பூமியுடன் தொடர்பில் இருக்க பழக வேண்டும். அதற்கு வெறுங்காலுடன் நடக்கலாம். பசும்புல்வெளியில் நடப்பது மிகவும் நல்லது. இது போல் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

-மாலதி ஜெயராமன்

Tags:    

Similar News