கதம்பம்
- ஆண்டவனிடம் வலிமை கேட்டேன்..
- அன்பு கேட்டேன்.. வம்பர்களை கொடுத்தார்!
கேட்டது ஒன்று..
கிடைத்தது ஒன்று!
ஆண்டவனிடம்
வலிமை கேட்டேன்..
கஷ்டங்களை
கொடுத்தார்!
எதிர் கொண்டேன்..
வலிமை பெற்றேன்!
அறிவு கேட்டேன்..
பிரச்சனைகளை
கொடுத்தார்!
சமாளித்தேன்..
அறிவுப் பெற்றேன்!
தைரியம் கேட்டேன்..
ஆபத்துக்களை
கொடுத்தார் !
சந்தித்து மீண்டேன்..
தைரியம் பெற்றேன்!
அன்பு கேட்டேன்..
வம்பர்களை கொடுத்தார்!
அனுசரித்து சென்று
வம்பர்களின்
அன்பையும் பெற்றேன்!
வளமான வாழ்வு கேட்டேன்..
சிந்திக்கும் மூளையை
கொடுத்தார்!
வளமான வாழ்வு
கிடைத்தது!
கேட்டது ஒன்று,!
கிடைத்தது ஒன்று!!
கிடைத்ததை வைத்து
கேட்டதைப் பெற்றேன்!
-மனோகர் ராஜா