கதம்பம்

தீப தரிசனத்தின் மகிமை

Published On 2024-06-08 15:15 IST   |   Update On 2024-06-08 15:16:00 IST
  • தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும்.
  • நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்.

நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம்.

அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும். பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தியால்..

1) மனக் கவலை தூள் படும்.

2) கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

3) ஒற்றைத்தலைவலி சரியாகும்.

4) நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்.

5)ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்.

6) முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்.

எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.

- சிவசங்கர்

Tags:    

Similar News