கதம்பம்
null

இலவசம்

Published On 2024-05-05 10:45 GMT   |   Update On 2024-05-05 10:46 GMT
  • பலர் கூடிநின்று கொடுக்கும் வழக்கத்தால் அது 'மொய்' என்றும் சொல்லப்பட்டது.
  • இலவயம் என்பது 'இலைவயம்' என்னும் வழக்கத்தின் வழியே தோன்றிய சொல்லாகும்.

இன்று இலவசம் என்கிறோமே ,அது எப்படி வந்தது தெரியுமா? இலவயம் என்ற சொல்லில் இருந்து தான் வந்தது. இலவயம் என்பது 'இலைவயம்' என்னும் வழக்கத்தின் வழியே தோன்றிய சொல்லாகும்.

திருமணம், பூப்பு நீராட்டு முதலிய மங்கல விழாக்களில் கலந்து கொள்பவர்கள், விழா நடத்தும் வீட்டாருக்கு இலை(வெற்றிலை)யில் காசு வைத்து வழங்குவார்கள். அது இலைவயம் எனப்பட்டது. பலர் கூடிநின்று கொடுக்கும் வழக்கத்தால் அது 'மொய்' என்றும் சொல்லப்பட்டது.

இலைவயம் வழங்கிய தொகை மீளத் தருவதை எதிர் பார்க்காமல் கொடுத்த கொடை ஆதலால், அப்படிப் பட்ட கொடை 'இலவசம்' ஆகிவிட்டது. பின்னே 'இனாம்' என்பதும் வந்து விட்டது.

-முது முனைவர் இளங்குமரனார்

Tags:    

Similar News