கதம்பம்

பெண்களுக்கு பூங்கார்

Published On 2024-04-08 10:45 GMT   |   Update On 2024-04-08 10:45 GMT
  • இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம் பூங்கார் அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
  • பூங்கார் அரிசியை சாதமாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிடலாம்.

பூங்கார் அரிசியை "பெண்களுக்கான அரிசி" என்று அழைக்கப்படுவதற்குக் காரணம், இதில் அதிக அளவு சத்துக்கள் இருப்பதால் தான். எந்த விதமான ஹார்மோன் மாற்றங்களையும் தடுக்கிறது மற்றும் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

சுகப்பிரசவம் ஆக விரும்பும் கர்ப்பிணிகள், ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த பூங்கார் அரிசியை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும்.

மினரல்ஸ் என்று சொல்லக்கூடிய ஜிங்க், அயன், வைட்டமின் பி9, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தயாமின் போன்ற சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட், உள்ளடக்கியுள்ளது.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம் பூங்கார் அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

பூங்கார் அரிசியை சாதமாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிடலாம். இந்த அரிசியில் இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவையும் செய்து உண்ணலாம்.

-கவி மரபு வைத்தியம்

Tags:    

Similar News

தம்பிடி