கதம்பம்

பெண்களின் பேச்சு!

Published On 2024-04-06 11:12 GMT   |   Update On 2024-04-06 11:12 GMT
  • வாய் அசைந்தால் மன இறுக்கம் குறைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.
  • பெண்கள், பேசிக்கொண்டிருப்பதில் எந்த ஆபத்துமில்லை. அதனால்நன்மைகள் தான்.

பெண்கள் ஏன் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்?

பெண்களிடம் ரசிக்கத் தக்க விஷயங்களில் அதுவும் ஒன்று.

பெண்களைத் தவிர வேறு யாரால் முடியும்? பேசிக்கொண்டே இருப்பதற்கு.

ஆண்கள், பேசுவதற்கான காரணங்களை அவ்வப்போது தேடி கண்டு பிடிக்க வேண்டும்.

பெண்களுக்கு மட்டும் காரணங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது !

கடவுளின் மகிமை அல்லவா இது.

பெண்கள் பேசிக்கொண்டே இருப்பதற்கு சிறப்பான காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆரம்ப காலம் முதலே, மன இறுக்கம் குறைவதாக நினைத்துக் கொண்டு ஆண்கள் பழகிக் கொள்ளும் சில பழக்கங்கள், பெண்களுக்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது.

உதாரணமாக, புகை பிடித்தல், சுயிங்கம் மெல்லுதல், பாக்குத்தூள் போடுவது போன்றவை.

பெண்களுக்கு அது நல்லதுமல்ல, வசீகரமானதுமல்ல.

மன இறுக்கத்தை குறைக்க அவர்கள் என்னதான் செய்வார்கள்?

பேச ஆரம்பித்து விட்டார்கள்.

வாய் அசைந்தால் மன இறுக்கம் குறைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

மருத்துவ உலகம் கண்டு பிடித்துள்ள ஆராய்ச்சி அறிக்கை என்ன கூறுகிறது என்றால்...'அதிகம் பேசும் பெண்களை இதய நோய் தாக்குவதில்லை' என்று.

பெண்கள், பேசிக்கொண்டிருப்பதில் எந்த ஆபத்துமில்லை. அதனால்நன்மைகள் தான்.

ஆபத்து எங்கு, யாரிடமிருந்து ஆரம்பிக்கிறது என்றால்,பெண்களின் அந்தப் பேச்சை அப்படியே நம்பி, ஆராய்ந்து பார்க்காமலேயே அதை செயல்படுத்த அல்லது மற்றவர்களிடம் சண்டையிட தயாராகும் ஆண்களால் தான்.

-ஓஷோ

Tags:    

Similar News

தம்பிடி