கதம்பம்

திறமைக்கு மரியாதை!

Published On 2024-04-02 09:37 GMT   |   Update On 2024-04-02 09:37 GMT
  • வி்க்டொரியா மகாராணி தன் அரண்மனையை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
  • எத்தனையோ விஞ்ஞானிகள் முயன்றும் கம்பியில்லா தந்தி முறையை கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியை கண்டார்கள்.

விக்டோரியா மகாராணியின் மகன் கடலில் பாய் மரப்படகில் பயிற்சி எடுத்து கொண்டு இருந்தார். தன் மகனிடம் அடிக்கடி பேச வேண்டும் என்று மகாராணி விரும்பினார். அதனால் கம்பியில்லாமல் தந்தி முறையை கண்டுபிடித்து கொடுக்க யாரால் முடியும்? என தேடினார்.

"என்னால் முடியும்" என்று முன் வந்தார் இளம் விஞ்ஞானி மார்க்கோனி. ராணியின் எதி்ர்பார்ப்புக்கு மேல் பாதி வேலையை முடித்தார் மார்க்கோனி.

ஒருநாள் தன் ஆராய்ச்சி கூடத்தை வி்ட்டு வெளியே வாக்கிங் வந்தார். அந்த நேரத்தில் வி்க்டொரியா மகாராணி தன் அரண்மனையை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

குட்மானிங் என்று அரசிக்கு மரியாதை செலுத்தினார் மார்கோனி. அதை சரியாக கவனி்க்காத விக்டோரியா மகாராணி, விஞ்ஞானிக்கு பதில் மரியாதை செலுத்தாமல் சென்று விட்டார்.

வேண்டும் என்றே நம்மை அவமானப்படுத்திவி்ட்டார் மகாராணி என்று எண்ணிய விஞ்ஞானி மார்க்கோனி, கம்பியில்லா தந்திமுறை கண்டுபிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

"சாதாரண வி்ஞ்ஞானியாக இருப்பவனுக்கு இவ்வளவு திமிரா? சரி போகட்டும் விடுங்கள்.. வேறு யாராவது ஒரு விஞ்ஞானியை நியமித்து மீதி வேலையை முடியுங்கள்" என்று உத்தரவிட்டார் மகாராணி.

எத்தனையோ விஞ்ஞானிகள் முயன்றும் கம்பியில்லா தந்தி முறையை கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியை கண்டார்கள். இனி கௌரவம் பார்த்தால் வேலை நடக்காது என்பதை நன்கு உணர்ந்தார் மகாராணி.

மார்கோனியின் வீட்டுக்கே நேரடியாக சென்று, "மறுபடியும் நீங்கள் எடுத்த வேலையை முடித்த தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார் விக்டோரியா மகாராணி.

உலகத்தையே ஆளும் விக்டோரியா மகாராணியின் அன்புக்கும் பணிவுக்கும் தலைவணங்கி பாதியில் நின்ற வேலையை நல்ல முறையாக செய்து கொடு்த்தார் மார்க்கோனி.

-பாரதி குமார்

Tags:    

Similar News

இலவசம்