கதம்பம்
- ஒரே குடும்பத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொடுப்பதோ அல்லது மருமகளாக ஏற்பதோ கூடாது.
- ஒருவர் வாழ்வு தாழ்ந்தும், மற்றொருவர் வாழ்வு உயர்ந்தும் இருக்கும்.
ஒரே குடும்பத்தில் இரு பெண்களை திருமணம் செய்யலாமா..?
இந்து சமய சாஸ்திரத்திரன் படி ஒரே குடும்பத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொடுப்பதோ அல்லது மருமகளாக ஏற்பதோ கூடாது.
ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண்ணை மணம் முடித்து கொடுத்தவுடன் இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொடுப்பது நல்லது கிடையாது. அப்படி இரு பெண்களையும் திருமணம் செய்தால் ஒருவர் வாழ்வு தாழ்ந்தும், மற்றொருவர் வாழ்வு உயர்ந்தும் இருக்கும். மேலும் அவர்களின் வாழ்க்கை சரியாக இருக்காது என சாஸ்திரம் கூறுகிறது.
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்து அந்த பெண் வேறேதும் தவறான காரணத்தால் கணவனோடு வாழாமல் போனால் அதற்கு பரிகாரமாக இன்னொரு பெண்ணை திருமண செய்து கொடுக்கலாம்.
-ஜோதிடர் சுப்பிரமணியன்.