- சாிபாதி என்றால் சமமான பகுதி என்று பொருள்.
- ‘பகு’என்ற குறிலிணை ‘பா’என நீண்டு, அத்துடன் தி சோ்ந்து ‘பாதி’ ஆனது .
பாதி வேறு; சாிபாதி வேறு .
இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது .
பாதி என்றால் பகுதி என்று பொருள் .
சாிபாதி என்றால் சமமான பகுதி என்று பொருள்.
" நீ உண்ணும் பொங்கலில் பாதி கொடு" என்றால், அது கால் பகுதியாகவும் இருக்கலாம் அல்லது முக்கால் பகுதியாகவும் இருக்கலாம் .
" சாிபாதி கொடு" என்றால் , பிாித்த இரண்டு பகுதிகளும் சமமாக இருக்க வேண்டும் .
இறைவன் தன் உடலில் சாிபாதியைப் பெண்ணுக்குக் கொடுத்தான் என்று சொல்ல வேண்டும். பாதியைப் பெண்ணுக்குக் கொடுத்தான் என்று சொல்வது பிழையாகும் .
பகுதி என்ற சொல்லே பாதியானது .
'பகு'என்ற குறிலிணை 'பா'என நீண்டு, அத்துடன் தி சோ்ந்து 'பாதி' ஆனது .
"குறுமையும் நெடுமையும் அளபிற் கோடலின்
தொடா்மொழி எல்லாம் நெட்டெழுத் தியல."
என்ற தொல்காப்பிய விதி இதற்கு இடம் தருகிறது .
தொகுப்பு -- தோப்பு
இயலும் -- ஏலும்
அகத்துக்கு -- ஆத்துக்கு
என்றானதும் இவ்விதிப்படியே .
-ஜெகதீசன்முத்துக்கிருஷ்ணன்