கதம்பம்

பாதியும் சரிபாதியும்!

Published On 2024-01-26 06:58 GMT   |   Update On 2024-01-26 06:58 GMT
  • சாிபாதி என்றால் சமமான பகுதி என்று பொருள்.
  • ‘பகு’என்ற குறிலிணை ‘பா’என நீண்டு, அத்துடன் தி சோ்ந்து ‘பாதி’ ஆனது .

பாதி வேறு; சாிபாதி வேறு .

இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது .

பாதி என்றால் பகுதி என்று பொருள் .

சாிபாதி என்றால் சமமான பகுதி என்று பொருள்.

" நீ உண்ணும் பொங்கலில் பாதி கொடு" என்றால், அது கால் பகுதியாகவும் இருக்கலாம் அல்லது முக்கால் பகுதியாகவும் இருக்கலாம் .

" சாிபாதி கொடு" என்றால் , பிாித்த இரண்டு பகுதிகளும் சமமாக இருக்க வேண்டும் .

இறைவன் தன் உடலில் சாிபாதியைப் பெண்ணுக்குக் கொடுத்தான் என்று சொல்ல வேண்டும். பாதியைப் பெண்ணுக்குக் கொடுத்தான் என்று சொல்வது பிழையாகும் .

பகுதி என்ற சொல்லே பாதியானது .

'பகு'என்ற குறிலிணை 'பா'என நீண்டு, அத்துடன் தி சோ்ந்து 'பாதி' ஆனது .

"குறுமையும் நெடுமையும் அளபிற் கோடலின்

தொடா்மொழி எல்லாம் நெட்டெழுத் தியல."

என்ற தொல்காப்பிய விதி இதற்கு இடம் தருகிறது .

தொகுப்பு -- தோப்பு

இயலும் -- ஏலும்

அகத்துக்கு -- ஆத்துக்கு

என்றானதும் இவ்விதிப்படியே .

-ஜெகதீசன்முத்துக்கிருஷ்ணன்

Tags:    

Similar News