- மரத்தை ஒட்டித்தான் விதை இருக்கும். அந்த விதையை ஒட்டித்தான் மரம் இருக்கும். இது தொடர் நிகழ்ச்சி.
- குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் பெற்றோர்கள் மன நலத்திலே உடல் நலத்திலே நலம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
"மருத்துவம் என்பது நோய் வந்த பிறகு தீர்ப்பது மாத்திரம் அல்ல. நோயே வராமலும் காக்கலாம்.
நோய் என்றால் என்ன? இயற்கையாக நம்முடைய உடலிலே, உடல் நலத்திற்கு ஏற்ற எல்லாம் அமைந்து இருக்கிறது.
அவ்வப்போது ஏற்படுகின்ற குறையைக் கூட சரிக்கட்டிக் கொள்ளக் கூடிய அளவுக்கு இயற்கையினுடைய ஆற்றல் அமைப்பு நம் உடலிலே இருக்கிறது.
ஒவ்வொரு செல்லும் ஒரு இரசாயனச் சாலையாக வேலை செய்து கொண்டு இருக்கிறது. நாம் அதைத் தெரிந்து கொண்டு ஒத்துழைத்தால் போதும்.
மேலும் கருவமைப்பு குறித்தும் அதிகமாக நினைவில் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் எந்த முறையிலே மனம், உடல் அமைப்பிலே இருக்கின்றார்களோ அதை ஒட்டித்தான் ஒரு குழந்தை உருவாக முடியும்.
மரத்தை ஒட்டித்தான் விதை இருக்கும். அந்த விதையை ஒட்டித்தான் மரம் இருக்கும். இது தொடர் நிகழ்ச்சி.
குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் பெற்றோர்கள் மன நலத்திலே உடல் நலத்திலே நலம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
பெற்றோர்கள் இடத்திலே ஒருவருக்கு ஒருவர் பிணக்கு மனத்தாங்கல் இருக்குமேயானால் நமது உடலிலே முக்கியமான சக்தியாகிய சீவகாந்த ஆற்றல் பிணக்குற்று அது விஷத் தன்மையாக மாறக் கூடியதாகவே அமையும். அது குழந்தைகளையும் பாதிக்கும். ஆகவே மனநலமும் உடல்நலமும் காத்து இனிமை காப்போம்.
-வேதாத்திரி மகரிஷி