கதம்பம்

இல்லறம் சிறக்க கணவன் கடைப்பிடிக்க வேண்டியவை!

Published On 2023-11-06 11:18 IST   |   Update On 2023-11-06 11:18:00 IST
  • மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
  • உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.

உலகில் மனித சமுதாயம் நிலைத்திருக்க பிரதான காரணியாக அமைவது தாம்பத்ய உறவுதான். கணவன் மனைவி இடையே அன்பை வெளிப்படுத்துவதில் ஏற்படும் தயக்கம்தான் சிக்கலுக்கு காரணமாகிறது.

தன்னை நேசிக்கும் கணவரையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். எனவே இதனை கணவன் புரிந்து கொண்டு அடிக்கடி ஐ லவ் யூ சொல்லி மனைவியின் மனதை ஆறுதல் படுத்தவேண்டும்.

மனைவி தன் கணவனிடம் பின்வரும் விடயங்களை எதிர்பார்க்கின்றனர்.

அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

மனது புண்படும்படி பேசக் கூடாது.

கோபப்படக்கூடாது.

சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது

பலர் முன் திட்டக்கூடாது.

எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்

மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

வித்தியாசமாக ஏதாவது செய்தால் இரசிக்க வேண்டும். பாராட்ட வேண்டும்.

பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.

மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.

தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.

சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

குழந்தைகள் தவறு செய்துவிட்டால் 'இது உன் குழந்தை என்று ஒதுங்கக் கூடாது.

அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்.ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவியே.

எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.

கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக தாம்பத்தியத்தில் மனைவி திருப்தி அடைந்தாளா? என்பதில் அக்கறையாக இருக்க வேண்டும்.

தவறு செய்யாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை. கணவனோ அல்லது மனைவி தவறு செய்தால் அவற்றை குத்திக்காட்டி பேசுவதை விட பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தவே முற்பட வேண்டும். தம்பதியரிடையே மன்னிக்கும் அம்சம் இல்லாவிட்டால் எந்த உறவும் நிலைத்திருக்க முடியாது.

Tags:    

Similar News