உண்மை எது

வேலூரில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என வதந்தி - ஆட்சியர் விளக்கம்

Published On 2023-03-02 02:57 GMT   |   Update On 2023-03-02 02:57 GMT
  • பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் :

வேலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்படலாம் என, ஆட்சியருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், கடந்த ஆண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டதன் அடிப்படையில், புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News