செய்திகள்
இந்தியா - இலங்கை கலாச்சார தூதராக அவர் நியமனம் - வைரலாகும் தகவல்
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையேயான கலாச்சார தூதராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலான மானிகே மகே ஹித்தே பாடலை பாடிய யோஹானி டி சில்வா இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கலாச்சார தூதராக நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையம் யோஹானியை புதிய கலாச்சார தூதர் என பாராட்டி இருந்தது. இந்த பதிவு தவறான தகவல்களுடன் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் இந்திய உயர் ஆணையம், யோஹானியை பாராட்டியது, ஆனால் தூதராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கவில்லை என உறுதியாகிவிட்டது.
யூடியூபில் யோஹானி பாடிய மானிகே மகே ஹித்தே பாடல் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பார்வைகளை கடந்துள்ளது. இதற்கு கொலம்போவில் உள்ள இந்திய உயர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், யோஹானியை பாராட்டியது.