செய்திகள்
கோப்புப்படம்

அமெரிக்காவில் தடுப்பூசி போடாதவர்களை தனிமைப்படுத்த உத்தரவு - வைரல் பதிவை நம்பாதீங்க

Published On 2021-08-03 05:25 GMT   |   Update On 2021-08-03 05:25 GMT
அமெரிக்காவில் கொரோனாவைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதையொட்டி இணையத்தில் வைரலாகும் பகீர் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


அமெரிக்காவில் மீண்டும் கொரோனாவைரஸ் கோரத்தாண்டவம் ஆட துவங்கி இருக்கிறது. நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில், தடுப்பூசி போடாதவர்களை முகாம்களில் தனிமைப்படுத்த அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டு இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

'கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அமெரிக்கர்கள், அதனை செலுத்திக் கொள்ளும் வரை தனிமைப்படுத்தி முகாம்களில் தங்க வைக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருக்கிறார்,' என கூறும் செய்தி தொகுப்பின் ஸ்கிரீன்ஷாட் வைரல் பதிவுகளுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. 



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அமெரிக்க அரசு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்காததை கேலி செய்யும் வகையில் எழுதப்பட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை இணைய விஷமிகள் பகிர்ந்து வருகின்றனர் என தெரியவந்துள்ளது.

உண்மையில் இதுபற்றிய செய்தி தொகுப்பு கேலி செய்திகளை வெளியிடும் தனியார் வலைதளம் ஒன்றில் ஜூன் 17 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. செய்தியில், 2022-க்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை தனிமை முகாம்களில் அடைக்க ஜோ பைடன் உத்தரவு,' எனும் தலைப்பிடப்பட்டு இருக்கிறது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News