செய்திகள்
வைரல் புகைப்படம்

ஜம்மு வெள்ள பாதிப்புகளில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படங்கள்

Published On 2021-07-29 05:19 GMT   |   Update On 2021-07-29 05:19 GMT
மேக வெடிப்பு காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் 19 பேர் மாயமாகி இருக்கின்றனர்.


ஜம்மு கஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள பாதிப்பில் சிக்கி சில உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், வெள்ள பாதிப்புகளின் போது எடுக்கப்பட்டதாக கூறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. புகைப்படங்கள் 'கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக 40 பேர் காணவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போதைய தகவல்களின்படி 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன,' தலைப்பில் பகிரப்பட்டு வருகின்றன. 



புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை 2016 வாக்கில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. மேலும் இவை உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் போது எடுக்கப்பட்டவை ஆகும். இதனை உறுதிப்படுத்தும் வகையில், வைரல் புகைப்படங்கள் அடங்கிய செய்தி தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. 

அந்த வகையில், வைரல் புகைப்படங்கள் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. தற்போதைய தகவல்களின்படி ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சுமார் ஏழு பேர் உயரிழந்துள்ளனர். மேலும் 17-க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Tags:    

Similar News