செய்திகள்
சீமான்

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

Published On 2019-08-19 13:47 GMT   |   Update On 2019-08-19 14:26 GMT
சாதி கட்சிகளை விரும்பும் பா.ஜனதா, தமிழகத்தை வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரித்து விடும் என சீமான் குற்றம் சாட்டினார்.

அவனியாபுரம்:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது மாவட்டங்கள் அதிகமாக பிரிக்கப்பட்டு வருகிறது. எதற்காக பிரிக்கிறார்கள்? என்று தெரியவில்லை. நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம். இவர்கள் காஷ்மீரை போல தமிழகத்தை 2-ஆக உடைக்க வாய்ப்புள்ளது.

சாதிய கட்சிகளை அதிகமாக நம்புவது பாரதீய ஜனதா. அதனால் தமிழகத்தை வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரித்து விடுவார்கள். சென்னை, புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். தமிழகத்தை 2 ஆக பிரிப்பது அவசியமற்றது. அதை விடவும் கூடாது.

மாநிலங்களை 2 ஆக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் இவர்கள் பிரிக்க வேண்டியது நியாயமாக அதிக தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News