செய்திகள்
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் திமுக முன்னணி
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை விட தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா 9636 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஊட்டி:
நீலகிரி பாராளுமன்ற தொகுதி 4 மாவட்டங்களை உள்ளடக்கியது ஆகும். மலைப்பகுதி மற்றும் சமவெளியில் இந்த தொகுதி அமைந்துள்ளது.
இந்த தொகுதியில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் தொகுதியும், திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி தொகுதியும் ஈரோடு மாவட்டத்தில் பவானி சாகர் என 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது.
இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தியாகராஜன், தி.மு.க.வில் ஆ.ராசா, அ.ம.மு.க.வில் ராமசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜேந்திரன் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 10 பேர் போட்டியிட்டனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 10 லட்சத்து 6 ஆயிரத்து 262 வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குகள் ஊட்டி சிக்னல் அருகே உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. அதன் முடிவு வருமாறு-
தியாகராஜன் (அ.தி.மு.க.)-17,893
ஆ.ராசா (தி.மு.க.) - 27,529
ராமசாமி (அ.ம.மு.க.)-2,948
ராஜேந்திரன் (மக்கள் நீதி மய்யம்)- 1,037
முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை விட தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா 9636 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளனர்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதி 4 மாவட்டங்களை உள்ளடக்கியது ஆகும். மலைப்பகுதி மற்றும் சமவெளியில் இந்த தொகுதி அமைந்துள்ளது.
இந்த தொகுதியில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் தொகுதியும், திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி தொகுதியும் ஈரோடு மாவட்டத்தில் பவானி சாகர் என 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது.
இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தியாகராஜன், தி.மு.க.வில் ஆ.ராசா, அ.ம.மு.க.வில் ராமசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜேந்திரன் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 10 பேர் போட்டியிட்டனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 10 லட்சத்து 6 ஆயிரத்து 262 வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குகள் ஊட்டி சிக்னல் அருகே உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. அதன் முடிவு வருமாறு-
தியாகராஜன் (அ.தி.மு.க.)-17,893
ஆ.ராசா (தி.மு.க.) - 27,529
ராமசாமி (அ.ம.மு.க.)-2,948
ராஜேந்திரன் (மக்கள் நீதி மய்யம்)- 1,037
முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை விட தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா 9636 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளனர்.