செய்திகள்

தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

Published On 2019-04-16 21:11 IST   |   Update On 2019-04-16 21:11:00 IST
தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. வீடு, அலுவலகத்தில் உள்ளே, வெளியே செல்ல யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று இரவு கனிமொழி வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
Tags:    

Similar News