செய்திகள்
கோப்புப்படம்

விவசாயிகளின் நகைக்கடன்கள் தள்ளுபடி- மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

Published On 2019-04-03 12:46 IST   |   Update On 2019-04-03 12:46:00 IST
திமுக, காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் 5 சவரன் வரை நகைகளை வைத்து பெற்ற கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #MKStalin #AgriGoldLoan
திருப்பூர்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூரில், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து பிரசாரம் செய்தார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை விமர்சித்தார். மேலும், திமுக வெற்றி பெற கூடாது என்பதற்காக, பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

‘கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் 5 சவரன் வரை நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். இந்த வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும்’ என்றும் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.



விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #MKStalin #AgriGoldLoan

Similar News