மெலட்டூர் அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் பறிமுதல்
மெலட்டூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தலும் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கும், சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுவதையொட்டி மெலட்டூரை அடுத்த நரியனூரில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அறந்தாங்கியில் இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றி வந்த ஒரு வாகனத்தை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த வாகனத்தில் வந்தவர்கள் உரிய ஆவனம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 160 வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பாபநாசம் உதவி தேர்தல் அலுவலர் இளங்கோ, தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் செந்தில் ஆகியேர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019