செய்திகள்

வெயிலில் கூட்டம் நடத்தக்கூடாது - தேர்தல் ஆணையம் கண்டிப்பு

Published On 2019-03-20 10:05 GMT   |   Update On 2019-03-20 10:05 GMT
பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தை வெயிலில் நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. #ElectionCommission #Parliamentelection #LSPolls

சென்னை:

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ல் நடைபெற இருப்பதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.

தற்போது நிலவி வரும் கடுமையான கோடை வெயில் நேரத்தில் பிற்பகலிலும் பகல் நேரத்திலும் பொதுக் கூட்டங்கள் நடைபெறுவதால் தங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக சில அமைப்புகளிடம் இருந்தும் குடிமக்கள் குழுக்களிடம் இருந்தும் முறையீடுகள் வந்துள்ளன.

மேலும் இதுபோன்ற கூட்டங்களில் வெப்பம் தாங்காமல் சிலர் உயிரிழந்திருப்பதும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கோடை காலத்தில் வெயில் நேரத்தில் பொதுக்கூட்டங்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் நிழல் தரும் கூரை, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை செய்யப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் முதலுதவி வசதிகளை செய்து கொடுத்தால் தான் கடினமான சூழ்நிலைகள் ஏற்படும் போது யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க முடியும். எனவே மேற்கண்ட ஆலோசனைகளை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், ஏஜெண்ட்கள் அனைவரும் பின்பற்றி பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionCommission #Parliamentelection #LSPolls

Tags:    

Similar News