செய்திகள்

அதிமுக வேட்பாளர் தேர்வு: எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். ஆலோசனை

Published On 2019-03-16 07:51 GMT   |   Update On 2019-03-16 07:51 GMT
அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் தேர்வு பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்கள். #ADMK #EdappadiPalaniswami #OPS
சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.

அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் வந்தனர்.



முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாளை 18 தொகுதி இடைத்தேர்தல் நேர்காணல் நடைபெற உள்ளது.

அதன் பிறகு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களை எப்படி நடத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை பற்றியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்கள்.

சுமார் 45 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடைபெற்றது. #ADMK #EdappadiPalaniswami #OPS
Tags:    

Similar News