உள்ளூர் செய்திகள்

பாளையில் ஆயுதத்துடன் சென்ற வாலிபர்கள் கைது

Published On 2022-08-04 09:26 GMT   |   Update On 2022-08-04 09:26 GMT
  • மேலப்பாளையம் போலீசார் தெற்கு புறவழிச்சாலையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • அவர்களிடம் 2 அடி உயரமுள்ள வாள் இருப்பதும் தெரியவந்தது.

நெல்லை:

நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலப்பாளையம் விலக்கு பகுதியில் 2 பேர் சந்தேகமான முறையில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கே.டி.சி. நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது22), அண்ணாநகரை சேர்ந்த சுடலைமணி (22) என்பதும், அவர்களிடம் 2 அடி உயரமுள்ள வாள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் வழிப்பறி செய்யும் நோக்கில் அவர்கள் அங்கு நின்று இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

சுடலைமணி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் வெளியே வந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News